என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் தந்தை- அக்காள் மகனை வெட்டி கொன்ற வாலிபர்
Byமாலை மலர்20 April 2017 8:49 AM GMT (Updated: 20 April 2017 8:49 AM GMT)
புதுவையில் ஒரே வீட்டில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு காமராஜர் நகர் அன்னை தெரசா வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 75).
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் ஓய்வுக்கு பிறகு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணியில் சேர்ந்து பின்னர் அதில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இவரது மனைவி வசந்தா (70). இவர்களுக்கு ஷகிலா (38) என்ற மகளும், சிவா (32) என்ற மகனும் உள்ளனர்.
மகள் ஷகிலா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார். இவருடைய மகன் பரத்குமார் (16). 9-ம் வகுப்பு படித்து வந்தான். ஷகிலா ஜிப்மரில் உள்ள ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், பரத்குமார் தாத்தா வீட்டில் வசித்து வந்தான்.
சிவக்குமார் பிசியோ தெரப்பிஸ்ட் பட்டம் பெற்று இருந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆரம்பத்தில் வேலைக்கு சென்ற அவர் சமீப காலமாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
மகன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் தந்தை செல்வராஜ் அவரை தொடர்ந்து கண்டித்து வந்தார். இதனால் தந்தை- மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. வீட்டில் இருந்து அலறல் சத்தமும் கேட்டது. வழக்கமாக நடக்கும் சண்டைதான் என கருதி அக்கம் பக்கத்தினர் யாரும் கண்டு கொள்ளவில்லை.
கடந்த 3 நாட்களாக இந்த வீடு பூட்டி கிடந்தது. நேற்று மதியத்துக்கு பிறகு வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டின் வாசலில் ரத்தக்கறையும் படிந்து இருந்தது.
இதை பார்த்தவர்கள் கோரிமேடு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, முன்பக்க அறையிலும், உள் அறையிலும் ரத்தம் தேங்கி கிடந்தது. அதில் இருந்துதான் இந்த துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது 2 நாட்களுக்கு முன்பு சிவக்குமாரும், அவருடைய தாயார் வசந்தா இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றதை பார்த்ததாக கூறினார்கள். வீட்டில் இருந்த தந்தை செல்வராஜ், சிறுவன் பரத்குமார் ஆகியோரை காணவில்லை.
எனவே, சிவக்குமார் தனது தந்தையையும், அக்காள் மகன் பரத்குமாரையும் கொலை செய்து பிணத்தை எங்கேயாவது மறைத்து இருக்க வேண்டும் என போலீசார் கருதினார்கள்.
எனவே, சிவக்குமாரை பிடிக்க பல்வேறு இடங்களில் தேடினார்கள். இன்று காலை சிவக்குமாரும், தாயார் வசந்தாவும் ரகசிய இடத்தில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்து போலீ சார் விசாரித்தார்கள்.
சிவக்குமார் போலீசாரிடம் கூறும்போது, தந்தை செல்வராஜையும், பரத்குமாரையும் வெட்டி கொன்று விட்டதாகவும், பின்னர் பிணத்தை மூட்டையாக கட்டி எடுத்து சென்று மேட்டுப்பாளையம் பகுதியில் ரகசிய இடத்தில் வீசியதாகவும் கூறினார்.
எனவே, போலீசார் சிவக்குமாரை அந்த இடத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் சொன்ன இடத்தில் பிணம் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே, பிணத்தை வீசிய இடம் எது என்று தெரியாமல் சிவக்குமார் தவறுதலாக கூறுவதாக கருதி அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடி வருகிறார்கள். ஆனால், இதுவரை பிணம் கிடைக்கவில்லை.
2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து பல மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இந்த மூட்டையில் இருந்தன. அதோடு சேர்த்து இருவருடைய பிணத்தையும் மூட்டையாக கட்டி எடுத்து சென்றுள்ளார்.
அவர் எந்த ஆட்டோவை இதற்காக பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை. எனவே, ஆட்டோவை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீசாரிடம் இதுபற்றி கேட்ட போது, பிணத்தை கண்டுபிடித்த பிறகுதான் கொலை பற்றி உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தனர். மற்ற விவரங்களை சொல்ல மறுத்து விட்டனர்.
ஒரே வீட்டில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை கோரிமேடு காமராஜர் நகர் அன்னை தெரசா வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 75).
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் ஓய்வுக்கு பிறகு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணியில் சேர்ந்து பின்னர் அதில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இவரது மனைவி வசந்தா (70). இவர்களுக்கு ஷகிலா (38) என்ற மகளும், சிவா (32) என்ற மகனும் உள்ளனர்.
மகள் ஷகிலா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார். இவருடைய மகன் பரத்குமார் (16). 9-ம் வகுப்பு படித்து வந்தான். ஷகிலா ஜிப்மரில் உள்ள ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், பரத்குமார் தாத்தா வீட்டில் வசித்து வந்தான்.
சிவக்குமார் பிசியோ தெரப்பிஸ்ட் பட்டம் பெற்று இருந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆரம்பத்தில் வேலைக்கு சென்ற அவர் சமீப காலமாக வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
மகன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் தந்தை செல்வராஜ் அவரை தொடர்ந்து கண்டித்து வந்தார். இதனால் தந்தை- மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. வீட்டில் இருந்து அலறல் சத்தமும் கேட்டது. வழக்கமாக நடக்கும் சண்டைதான் என கருதி அக்கம் பக்கத்தினர் யாரும் கண்டு கொள்ளவில்லை.
கடந்த 3 நாட்களாக இந்த வீடு பூட்டி கிடந்தது. நேற்று மதியத்துக்கு பிறகு வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டின் வாசலில் ரத்தக்கறையும் படிந்து இருந்தது.
இதை பார்த்தவர்கள் கோரிமேடு போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, முன்பக்க அறையிலும், உள் அறையிலும் ரத்தம் தேங்கி கிடந்தது. அதில் இருந்துதான் இந்த துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது 2 நாட்களுக்கு முன்பு சிவக்குமாரும், அவருடைய தாயார் வசந்தா இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றதை பார்த்ததாக கூறினார்கள். வீட்டில் இருந்த தந்தை செல்வராஜ், சிறுவன் பரத்குமார் ஆகியோரை காணவில்லை.
எனவே, சிவக்குமார் தனது தந்தையையும், அக்காள் மகன் பரத்குமாரையும் கொலை செய்து பிணத்தை எங்கேயாவது மறைத்து இருக்க வேண்டும் என போலீசார் கருதினார்கள்.
எனவே, சிவக்குமாரை பிடிக்க பல்வேறு இடங்களில் தேடினார்கள். இன்று காலை சிவக்குமாரும், தாயார் வசந்தாவும் ரகசிய இடத்தில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடித்து போலீ சார் விசாரித்தார்கள்.
சிவக்குமார் போலீசாரிடம் கூறும்போது, தந்தை செல்வராஜையும், பரத்குமாரையும் வெட்டி கொன்று விட்டதாகவும், பின்னர் பிணத்தை மூட்டையாக கட்டி எடுத்து சென்று மேட்டுப்பாளையம் பகுதியில் ரகசிய இடத்தில் வீசியதாகவும் கூறினார்.
எனவே, போலீசார் சிவக்குமாரை அந்த இடத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் சொன்ன இடத்தில் பிணம் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே, பிணத்தை வீசிய இடம் எது என்று தெரியாமல் சிவக்குமார் தவறுதலாக கூறுவதாக கருதி அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடி வருகிறார்கள். ஆனால், இதுவரை பிணம் கிடைக்கவில்லை.
2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து பல மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இந்த மூட்டையில் இருந்தன. அதோடு சேர்த்து இருவருடைய பிணத்தையும் மூட்டையாக கட்டி எடுத்து சென்றுள்ளார்.
அவர் எந்த ஆட்டோவை இதற்காக பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை. எனவே, ஆட்டோவை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீசாரிடம் இதுபற்றி கேட்ட போது, பிணத்தை கண்டுபிடித்த பிறகுதான் கொலை பற்றி உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தனர். மற்ற விவரங்களை சொல்ல மறுத்து விட்டனர்.
ஒரே வீட்டில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X