என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
Byமாலை மலர்18 April 2017 11:09 AM GMT (Updated: 18 April 2017 11:09 AM GMT)
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 21-ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ பயிற்சி வகுப்புகளோ நடத்தப்படக்கூடாது என்றும், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
முதலில் ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பிறகுதான் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைப்பதாலும், அனல் காற்று வீசுவதாலும் முன்கூட்டியே விடுமுறை விட முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் 21-ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளோ பயிற்சி வகுப்புகளோ நடத்தப்படக்கூடாது என்றும், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
முதலில் ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பிறகுதான் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைப்பதாலும், அனல் காற்று வீசுவதாலும் முன்கூட்டியே விடுமுறை விட முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X