என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் தகுதிக்கு ஏற்ப பொறுப்பு வழங்கப்படும்: ஜெ.தீபா
Byமாலை மலர்18 April 2017 3:37 AM GMT (Updated: 18 April 2017 3:37 AM GMT)
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் தகுதிக்கேற்ப பொறுப்புகள் வழங்கப்படும் என்றும், செய்த கட்சி பணிகளை தலைமையிடம் வழங்குமாறும் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.
சென்னை:
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
எனது தலைமை ஏற்று தமிழகம் முழுவதும் மக்கள் பணியாற்றிய உண்மையான ஜெயலலிதாவின் விசுவாசிகள் தாங்கள் செய்த பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் நகல்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுடைய மனுக்களை நானே பரிசீலனை செய்து அவரவர் தகுதிக்கேற்ப பொறுப்புகள் வழங்கப்படும் என்பதை பேரவை செயல் வீரர்கள், வீராங்கனைகளுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் செய்த பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் நகல்களை வழங்க வேண்டிய நாள், நேரம், மாவட்டங்கள் விவரம் வருமாறு:-
21-ந்தேதி காலை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், மதியம் வேலூர், நாமக்கல் மாவட்டங்கள், 22-ந்தேதி காலை கரூர், சேலம் மாவட்டங்கள், மாலை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள், 23-ந்தேதி காலை கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள், மாலை திருநெல்வேலி, மதுரை மாவட்டங்கள், 24-ந்தேதி காலை தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்கள், மாலை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்.
25-ந்தேதி காலை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள், மாலை ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம், 26-ந்தேதி காலை திண்டுக்கல், தேனி மாவட்டங்கள், மாலை கோவை, நீலகிரி மாவட்டங்கள், 27-ந்தேதி காலை தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள், மாலை புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள், 28-ந்தேதி காலை விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள், மாலை ராமநாதபுரம் மாவட்டம்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் நடத்திட கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
எனது தலைமை ஏற்று தமிழகம் முழுவதும் மக்கள் பணியாற்றிய உண்மையான ஜெயலலிதாவின் விசுவாசிகள் தாங்கள் செய்த பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் நகல்களை மாவட்டந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுடைய மனுக்களை நானே பரிசீலனை செய்து அவரவர் தகுதிக்கேற்ப பொறுப்புகள் வழங்கப்படும் என்பதை பேரவை செயல் வீரர்கள், வீராங்கனைகளுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் செய்த பணிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் நகல்களை வழங்க வேண்டிய நாள், நேரம், மாவட்டங்கள் விவரம் வருமாறு:-
21-ந்தேதி காலை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், மதியம் வேலூர், நாமக்கல் மாவட்டங்கள், 22-ந்தேதி காலை கரூர், சேலம் மாவட்டங்கள், மாலை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள், 23-ந்தேதி காலை கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்கள், மாலை திருநெல்வேலி, மதுரை மாவட்டங்கள், 24-ந்தேதி காலை தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்கள், மாலை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்.
25-ந்தேதி காலை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள், மாலை ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம், 26-ந்தேதி காலை திண்டுக்கல், தேனி மாவட்டங்கள், மாலை கோவை, நீலகிரி மாவட்டங்கள், 27-ந்தேதி காலை தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள், மாலை புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள், 28-ந்தேதி காலை விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள், மாலை ராமநாதபுரம் மாவட்டம்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் நடத்திட கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X