என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கரூர் மாவட்டத்தில் வாழைத்தார் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
வேலாயுதம் பாளையம்:
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, என் புகழுர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.
இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளுர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், வியாபரிகளுக்கும் விற்பனை செய்கின்றனர். சில வியாபாரிகள் வாழைத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றனர்.
வாழைத் தோட்டத்தில் விளையும் வாழைத்தார்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை நாமக்கல், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த வாரத்தில் பூவன் வாழைத்தார் ரூ.450, ரஸ்தாலி ரூ.350, கற்பூரவள்ளி ரூ.350, பச்சை நாடன் ரூ.300, மொந்தன் ரூ.400-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வழைத்தார் ரூ.400, ரஸ்தாலி ரூ.250, கற்பூரவள்ளி ரூ.400, பச்சை நாடன் ரூ.200, மொந்தன் ரூ.600-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
மழை பெய்யாததாலும், காவிரி மற்றும் புகளுர் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததாலும், கிணறுகளில் தண்ணீர் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதாலும், வாழைக்காய்களின் தன்மை குறைந்து இருப்பதால் வாழைத்தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்