search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி திடீர் மாயம்
    X

    பாவூர்சத்திரத்தில் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி திடீர் மாயம்

    கேரளாவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளி திடீரென மாயமானார். இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    நெல்லை:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பட்ட முடையார்புரத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது32). தொழிலாளி. இவர் தற்போது பாவூர்சத்திரத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கேரளாவுக்கு வேலைக்கு சென்றார்.

    அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுபற்றி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தினேசை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×