என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது அருந்தி விட்டு பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
Byமாலை மலர்13 April 2017 5:39 AM GMT (Updated: 13 April 2017 5:40 AM GMT)
புதுவையில் மது குடித்து விட்டு பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை பனையாடி குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன். இவர், மது அருந்து விட்டு பணிக்கு வந்ததாகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் தலைமை ஆசிரியர் கல்வித்துறையில் புகார் அளித்ததன் பேரில் சுப்பிரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் கடந்த மாதம் 24-ந்தேதி மீண்டும் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்தார். அவரை பள்ளியை விட்டு வெளியே போகும்படி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
அப்போது சுப்பிரமணியன் தலைமை ஆசிரியரையும், அங்கிருந்த சக ஆசிரியையும் இணைத்து ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் தலைமை ஆசிரியரை கையால் தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட மற்ற ஆசிரியர்களையும் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறையிடம் மீண்டும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கரிக்கலாம்பாக்கம் போலீசாருக்கு கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
அதன் பேரில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது, கையால் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.
புதுவை பனையாடி குப்பத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன். இவர், மது அருந்து விட்டு பணிக்கு வந்ததாகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் தலைமை ஆசிரியர் கல்வித்துறையில் புகார் அளித்ததன் பேரில் சுப்பிரமணியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் கடந்த மாதம் 24-ந்தேதி மீண்டும் மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்தார். அவரை பள்ளியை விட்டு வெளியே போகும்படி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
அப்போது சுப்பிரமணியன் தலைமை ஆசிரியரையும், அங்கிருந்த சக ஆசிரியையும் இணைத்து ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் தலைமை ஆசிரியரை கையால் தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட மற்ற ஆசிரியர்களையும் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறையிடம் மீண்டும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கரிக்கலாம்பாக்கம் போலீசாருக்கு கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.
அதன் பேரில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது, கையால் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X