search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு 4 சுயேச்சைகள் ஆதரவு
    X

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு 4 சுயேச்சைகள் ஆதரவு

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு சுயேட்சை கட்சி வேட்பாளர்கள் 4 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு சுயேட்சை வேட்பாளர் கணேசன் ஆதரவினை தெரிவித்ததோடு, ஆர்.கே.நகர் தொகுதி 47-வது வட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிராஜனுடன் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    ஏற்கனவே ரேணுகாதேவி, பத்மராஜன், மஞ்சுளா ரவிகுமார் ஆகிய 3 சுயேட்சை வேட்பாளர்களும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவினை தெரிவித்ததோடு, வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு தொகுதி மக்களிடையே வீதி, வீதியாகச் சென்று தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களையும், தொகுதியில் நிறைவேற்றவிருக்கும் திட்டங்களையும் மக்களிடையே எடுத்துக்கூறி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    Next Story
    ×