என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி அரியமங்கலத்தில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை
திருச்சி:
திருச்சி வரகனேரி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் சுதாகர் (வயது 38). நேற்று சுதாகர் அரியமங்கலம் அருகே ஜெகநாதபுரம் திருமகள் தெருவில் உள்ள ஒரு தனியார் சிப்ஸ் கம்பெனி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சுதாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
சுதாகர் எந்த வேலைக்கும் செல்லாமல் அந்த பகுதியில் சுற்றி திரிவார். நேற்று அந்த பகுதியில் சாப்பிடாமல் அலைந்துள்ளார். இரவில் மயக்கமாகி ரோட்டில் உள்ள தடுப்பு சுவரில் படுத்து கிடந்துள்ளார். அவரை அப்பகுதியனர் எழுப்பி அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தான் இரவில் சிப்ஸ் கம்பெனி அருகில் அவர் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சுதாகருக்கு தேவி என்ற மனைவி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்