search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அரியமங்கலத்தில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை
    X

    திருச்சி அரியமங்கலத்தில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை

    திருச்சி அரியமங்கலத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி வரகனேரி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் சுதாகர் (வயது 38). நேற்று சுதாகர் அரியமங்கலம் அருகே ஜெகநாதபுரம் திருமகள் தெருவில் உள்ள ஒரு தனியார் சிப்ஸ் கம்பெனி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சுதாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    சுதாகர் எந்த வேலைக்கும் செல்லாமல் அந்த பகுதியில் சுற்றி திரிவார். நேற்று அந்த பகுதியில் சாப்பிடாமல் அலைந்துள்ளார். இரவில் மயக்கமாகி ரோட்டில் உள்ள தடுப்பு சுவரில் படுத்து கிடந்துள்ளார். அவரை அப்பகுதியனர் எழுப்பி அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் தான் இரவில் சிப்ஸ் கம்பெனி அருகில் அவர் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சுதாகருக்கு தேவி என்ற மனைவி உள்ளார்.

    Next Story
    ×