என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காலாப்பட்டில் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை
காலாப்பட்டு:
புதுவை சின்னகாலாப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது47). இவர் பெரியகாலாப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இதற்கிடையே அவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் மனவேதனையில் தனசேகர் மதுகுடிக்க ஆரம்பித்தார். உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்தாலும் மனைவி பிரிந்து சென்றது தனசேகரின் மனதை வாட்டியது. இதனை மறக்க அளவுக்கு அதிகமாக மதுகுடித்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்றார். இந்த நிலையில் இன்று காலை தொழிற்சாலையில் காவலாளிகள் தங்கும் ஓய்வு அறையில் தனசேகர் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை முத்தியால்பேட்டை சோலைநகர் சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது41), மீனவர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள சிவக்குமார் சரியாக மீன்பிடி தொழிலுக்கு செல்வதில்லை. மேலும் சம்பாதிக்கும் பணத்தையும் வீட்டு செலவுக்கு கொடுப்பதில்லை.
இதனால் சிவக்குமாருக்கும், அவரது மனைவி அமர்தத்துக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல நேற்று முன்தினம் இரவிலும் இதுதொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சிவக்குமார் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்த கொண்டார்.
இதுகுறித்து சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்