என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கவர்னரை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி:
புதுவை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் இன்று காலை ஜென்ம ராக்கினி ஆலயம் எதிரே ஆம்பூர் சாலை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இளவரசன் தலைமை தாங்கினார். தீந்தமிழன் வரவேற்புரையாற்றினார்.
விடுதலை சிறுத்தை கட்சி தமிழ் மாநில நிர்வாகி பாவாணன் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் கபிலன், ஏசுவள்ளி, முத்தரசன், சுடர்வாளன், மணிமாறன், அன்பழகன், திருமாறன், காளி, இன்பதமிழன், திருமுகம், திருவரசன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அரசு ஆஸ்பத்திரியில் மின் தடையால் 3 நோயாளிகள் இறந்த சம்பவத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் அவர்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காவிரி நதிநீர் உரிமைக்கான வழக்கில் புதுவை அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும், விவசாய பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
காரைககாலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த புதுவை அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மத்திய அரசின் கைப் பாவையாகவும், மாநில மக்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் புதுவை கவர்னர் கிரண்பேடியை ஜனாதிபதி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்