என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் தவறான கேள்வி: மதிப்பெண் தரப்படும் என தகவல்
Byமாலை மலர்28 March 2017 2:23 PM GMT (Updated: 28 March 2017 2:23 PM GMT)
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டிருந்ததால், அந்த கேள்விக்கு உரிய மதிப்பெண் தரப்படும் என தெரிகிறது.
சென்னை:
தமிழத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 8-ம்தேதி தொடங்கியது. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 13-வது கேள்வி தவறாக இருந்தது.
திட்டக்குழுவின் தலைவர் யார்? என்பதே அந்தக் கேள்வி. 2015-ல் திட்டக்குழு கலைக்கப்பட்ட நிலையில் தவறாக கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் அந்த கேள்விக்கு உரிய மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தவறான கேள்வி இடம்பெற்றது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதேசமயம், தவறான கேள்விக்கு மதிப்பெண் தரப்படும் என்று தெரிகிறது.
நாளை மறுநாள் மொழிப் பாடத்தேர்வு (விருப்பத்தேர்வு) நடைபெறுகிறது. அத்துடன் பொதுத் தேர்வு நிறைவடைகிறது. மே 1-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 8-ம்தேதி தொடங்கியது. இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் 13-வது கேள்வி தவறாக இருந்தது.
திட்டக்குழுவின் தலைவர் யார்? என்பதே அந்தக் கேள்வி. 2015-ல் திட்டக்குழு கலைக்கப்பட்ட நிலையில் தவறாக கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் அந்த கேள்விக்கு உரிய மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தவறான கேள்வி இடம்பெற்றது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதேசமயம், தவறான கேள்விக்கு மதிப்பெண் தரப்படும் என்று தெரிகிறது.
நாளை மறுநாள் மொழிப் பாடத்தேர்வு (விருப்பத்தேர்வு) நடைபெறுகிறது. அத்துடன் பொதுத் தேர்வு நிறைவடைகிறது. மே 1-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X