என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மன்னார்குடி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை: தொழிலாளி போலீசில் சரண்
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே உள்ள மேலநத்தம் மேலகுடியை சேர்ந்தவர் சைமன் (வயது 55) விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். அதே ஊர் தோப்பு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (50). இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதெல்லாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று தோப்புபகுதியில் சைமன் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த அன்பழகன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டதாக கூறப்படுகிறது.
ஆத்திரம் அடைந்த அன்பழகன் அருகில் இருந்த கட்டையை எடுத்து சைமனை தொடர்ந்து தாக்கியுள்ளார். இதில் சைமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்ட சிலர் அங்கு ஓடிவந்தனர். அவர்களை பார்த்தவுடன் அன்பழகன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சைமனின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு முழுவதும் அன்பழகனை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை திருமக்கோட்டை போலீசில் அன்பழகன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்