என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முருங்கப்பாக்கத்தில் பேரிகார்டில் மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி
புதுச்சேரி:
புதுவை நைனார்மண்டபத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது43). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கத்துக்கு சென்றார்.
முருங்கப்பாக்கம் சந்திப்பில் திரும்பிய போது அங்குள்ள பேரிகார்டில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பங்கஜ்ஜாக்சன் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான ரமேசுக்கு தனலட்சுமி (37) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை பிச்சைவீரன்பேட் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மனைவி பொற்கலை (வயது86). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்ப சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் எதிர்பாராதவிதமாக பொற்கலை மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பொற்கலையை மொபட் ஓட்டி வந்த கோவிந்தசாலை பாரதிபுரத்தை சேர்ந்த டெய்லர் சர்தார்உசேன் (25) மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிசைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பொற்கலை நேற்று மாலை பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்