என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் 6 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
Byமாலை மலர்27 March 2017 3:09 AM GMT (Updated: 27 March 2017 3:09 AM GMT)
கோவை, கரூர், வேலூர் உள்பட தமிழகத்தில் 6 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. இந்த முறை வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாத நிலையில் வறட்சியும் தலைவிரித்து ஆடுகிறது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், வெயிலின் உக்கிரமும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று கோவை, கரூர், வேலூர் உள்பட 6 நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது, அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் வெயிலின் கொடுமை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
இன்னும் 4 முதல் 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு என்பது கிடையாது. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இந்த முறை அதிகமாக தான் இருக்கும்.
எதிர்பார்த்தது போல், வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோடை மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தற்போது வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. அதனால் தான் கோடை மழை இல்லாமல் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. இந்த முறை வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாத நிலையில் வறட்சியும் தலைவிரித்து ஆடுகிறது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், வெயிலின் உக்கிரமும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று கோவை, கரூர், வேலூர் உள்பட 6 நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது, அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் வெயிலின் கொடுமை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-
இன்னும் 4 முதல் 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு என்பது கிடையாது. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இந்த முறை அதிகமாக தான் இருக்கும்.
எதிர்பார்த்தது போல், வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோடை மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தற்போது வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. அதனால் தான் கோடை மழை இல்லாமல் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X