search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரட்சி தலைவியால் ஆதாயம் பெற்ற துரோகிகள் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார்கள்: டி.டி.வி.தினகரன்
    X

    புரட்சி தலைவியால் ஆதாயம் பெற்ற துரோகிகள் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார்கள்: டி.டி.வி.தினகரன்

    புரட்சி தலைவியால் ஆதாயம் பெற்ற துரோகிகள் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார்.

    சென்னை:

    ஆர்.கே.நகர் ‘அ.இ.அ.தி.மு.க. அம்மா’ அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டுகிறார்.

    39-வது வார்டு புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர், இருசப்ப மேஸ்திரி தெரு, அசோக் நகர், செழியன் நகர் பகுதியில் நேற்று தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புரட்சி தலைவியால் ஆதாயம் பெற்ற துரோகிகள் அ.தி.மு.க.வை அழிக்க பார்க்கிறார்கள். நம்முடைய எதிரிகளுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டு ‘அம்மா’ கட்டிக்காத்த கோடான கோடி தொண்டர்களின் உழைப்பில் வளர்ந்த இயக்கத்தை முடக்க முயற்சிக்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கும். அம்மாவின் ஆட்சி உண்மையுள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் காப்பாற்றப்பட்டு இன்று நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியின் திட்டங்கள் மேலும் 4 ஆண்டுகளுக்கு கிடைக்க இத்தொகுதியில் தொப்பி சின்னத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

    பிரசாரத்தில் அமைச்சர் காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர்கள் பி.வெற்றிவேல், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,

    Next Story
    ×