என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் காசநோயை ஒழிக்க ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்
ஊட்டி:
ஊட்டி ரெயில் நிலையத்தில் உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்.
உலகை அச்சுறுத்தும் நோய்களில் முதன்மையான ஒன்றாக காசநோய் உள்ளது. எனவே காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை காச நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் காச நோய் இல்லாத மாவட்டமாக மாற்றலாம். இதற்காக இந்த நிதியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பதற்கு ரூ.1 கோடியை 56 லட்சத்து 78 ஆயிரம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு கலெக்டர் சங்கர் கூறினார்.
பேரணியில் இணை இயக்குனர் சுகாதாரம் (பணிகள்) டாக்டர்.இரியன் ரவி குமார்,மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் டாக்டர்.எம்.செந்தில் மற்றும் மாவட்ட சுகாதார சங்க பணியாளர்கள், மருத்துவர்கள்,அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து முதற்கட்டமாக காசநோயால் பாதிக்கப்பட்ட 6 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை கலெக்டர் சங்கர் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்