search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
    X

    ராணிப்பேட்டை அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

    ராணிப்பேட்டை அருகே பிளாஸ்டிக் குடோனில் இன்று காலை 11 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த படியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர், ராணிப்பேட்டை அருகே உள்ள மாந்தாங்கலில் பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார்.

    இங்கு பிளாஸ்டிக் பைகள், டிரம்கள் போன்ற பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வைத்திருந்தார்.இந்த பிளாஸ்டிக் குடோனில் இன்று காலை 11 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. கரும் புகை சுற்றுப்புற பகுதிகளை சூழ்ந்தது. தகவலறிந்த ஆற்காடு மற்றும் சிப்காட் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.

    பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடி வருகிறார்கள். சம்பவ இடத்தில், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் ராஜலட்சுமி, டி.எஸ்.பி. விஜயகுமார், வாலாஜா தாசில்தார் பிரியா நேரில் பார்வையிட்டு தீயை அணைக்கும் பணியை தீவிரப்படுத்தினர்.

    Next Story
    ×