search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் கொள்ளை
    X

    ஈரோட்டில் ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் கொள்ளை

    ஈரோட்டில் ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள பெருமாள் காடு வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 57). ரெயில்வே ஊழியர்.

    அதே பகுதியில் வசிக்கும் சிலருடன் சேர்ந்து குமார் தனது மனைவியுடன் ஆன்மீக சுற்றுலா சென்று உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்று உள்ளனர்.

    பிறகு அங்கிருந்த பீரோவையும் உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்தனர்.

    இதே போல அதே பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். காவலாளியான இவர் நேற்று இரவுவேலைக்கு சென்று விட்டார்.

    அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அங்கு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.950-ஐ திருடினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

    குமார், ராஜமாணிக்கம் ஆகியோரின் வீடுகளில் கொள்ளைடித்தவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×