search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரியில் பெண்ணிடம் 11 பவுன் நகைகள்- ரூ.50 ஆயிரம் அபேஸ்
    X

    தர்மபுரியில் பெண்ணிடம் 11 பவுன் நகைகள்- ரூ.50 ஆயிரம் அபேஸ்

    தர்மபுரியில் பெண்ணிடம் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் ஜேப்படி செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது பேரனுக்கு அடுத்த வாரம் காது குத்து விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

    இதற்காக இவரது மனைவி ரங்கம்மாள் (35), மகள் அகிலா ஆகியோர் 11 பவுன் நகைகளை பாலீஷ் போட எடுத்து வந்தனர். நகை உள்ள பையில் ரூ.50 ஆயிரத்தை வைத்துக் கொண்டு வந்தனர். அந்தப்பணத்தில் தோடு மற்றும் சில நகைகள் வாங்க முடிவு செய்து இருந்தனர். அவர்கள் வந்த நாளில் நகைக்கடைகளுக்கு  விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இதனால் புதிய நகையும் வாங்கவில்லை. நகைகளை பாலீஷ் போடவும் முடிய வில்லை. இதனால் ஊருக்கு செல்ல பஸ் நிலையம் வந்தனர். அங்கு வந்து பார்த்த போது பையில் யாரோ பிளேடு போட்டு 11 பவுன் நகையையும், ரூபாய் 50 ஆயிரத்தையும் ஜேப்படி செய்து அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ரங்கம்மாள் தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×