search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ராயக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    ராயக்கோட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காளன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (28). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் இல்லை. 

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட கோவிந்தம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கோவிந்தம்மாளின் தந்தைசெவத்தானுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த அவர் சம்பவ இடத்துக்கு வந்து கோவிந்தம்மாளின் உடலை கண்டு கதறி அழுதார்.

    இதையடுத்து செவத்தன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மருமகன் ராமன் மற்றும் உறவினர்கள் உள்பட 7 பேர் மீது புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவர் ராமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×