என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயக்கோட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்24 March 2017 4:34 PM GMT (Updated: 24 March 2017 4:34 PM GMT)
ராயக்கோட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காளன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (28). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட கோவிந்தம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோவிந்தம்மாளின் தந்தைசெவத்தானுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த அவர் சம்பவ இடத்துக்கு வந்து கோவிந்தம்மாளின் உடலை கண்டு கதறி அழுதார்.
இதையடுத்து செவத்தன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மருமகன் ராமன் மற்றும் உறவினர்கள் உள்பட 7 பேர் மீது புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவர் ராமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காளன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (28). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட கோவிந்தம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோவிந்தம்மாளின் தந்தைசெவத்தானுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த அவர் சம்பவ இடத்துக்கு வந்து கோவிந்தம்மாளின் உடலை கண்டு கதறி அழுதார்.
இதையடுத்து செவத்தன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மருமகன் ராமன் மற்றும் உறவினர்கள் உள்பட 7 பேர் மீது புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவர் ராமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X