என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே நகை திருடிய பெண் கைது
Byமாலை மலர்23 March 2017 4:47 PM GMT (Updated: 23 March 2017 4:47 PM GMT)
திருச்சி அருகே பீரோவில் இருந்த தங்க நகையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி, திருவானைக்காவல் அருகே உள்ள கொண்டயம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன் மனைவி மோகனாம்பாள் (வயது 23). இவர் திருவானைக்காவல் அருகே தேவர் காலனியை சேர்ந்த மகேஷ்வரி (47), என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார்.
கடந்த 1 மாதத்திற்கு முன்பு மகேஷ்வரி, தனது 4 1/2 பவுன் நகையை அழகாக உள்ளதா? என்று மோகனாம்பாளிடம் காண்பித்து விட்டு பீரோவில் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மகேஷ்வரி பீரோவில் உள்ள நகையை பார்த்த போது அதனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மோகனாம்பாள் மீது சந்தேகம் உள்ளதாக கூறி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோகனாம்பாள், வறுமையின் காரணமாக நகையை எடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, திருவானைக்காவல் அருகே உள்ள கொண்டயம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன் மனைவி மோகனாம்பாள் (வயது 23). இவர் திருவானைக்காவல் அருகே தேவர் காலனியை சேர்ந்த மகேஷ்வரி (47), என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார்.
கடந்த 1 மாதத்திற்கு முன்பு மகேஷ்வரி, தனது 4 1/2 பவுன் நகையை அழகாக உள்ளதா? என்று மோகனாம்பாளிடம் காண்பித்து விட்டு பீரோவில் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மகேஷ்வரி பீரோவில் உள்ள நகையை பார்த்த போது அதனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மோகனாம்பாள் மீது சந்தேகம் உள்ளதாக கூறி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மோகனாம்பாள், வறுமையின் காரணமாக நகையை எடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X