என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாசர்பாடியில் ஒரே குடும்பத்தில் தந்தை- மகன் தற்கொலை
Byமாலை மலர்23 March 2017 10:35 AM GMT (Updated: 23 March 2017 10:35 AM GMT)
வியாசர்பாடியில் ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பூர்:
வியாசர்பாடி, பெரியார் நகரை சேர்ந்தவர் பவழராஜ் (40). டிரைவர். இவரது ஒரே மகன் பார்த்திபன் (16). அருகில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
பவழராஜுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மல்லிகா பிரிந்து சென்று விட்டார். பவழராஜ் மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த பார்த்திபன் திடீரென தீக்குளித்தார். உடல் கருகிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் பிரிந்து சென்ற மல்லிகா ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் கணவர் பவழராஜுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் மனவேதனை அடைந்த பவழராஜ் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்று விட்டார்.
இதற்கிடையே பெரம்பூர் பி.பி. சாலையில் உள்ள பூக்கடையில் இன்று காலை பவழராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த சோகத்தில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.
ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வியாசர்பாடி, பெரியார் நகரை சேர்ந்தவர் பவழராஜ் (40). டிரைவர். இவரது ஒரே மகன் பார்த்திபன் (16). அருகில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
பவழராஜுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மல்லிகா பிரிந்து சென்று விட்டார். பவழராஜ் மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த பார்த்திபன் திடீரென தீக்குளித்தார். உடல் கருகிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் பிரிந்து சென்ற மல்லிகா ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் கணவர் பவழராஜுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் மனவேதனை அடைந்த பவழராஜ் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்று விட்டார்.
இதற்கிடையே பெரம்பூர் பி.பி. சாலையில் உள்ள பூக்கடையில் இன்று காலை பவழராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த சோகத்தில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.
ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X