search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கையாடல்: ஊழியர் கைது
    X

    தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கையாடல்: ஊழியர் கைது

    புதுவையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் வள்ளலார் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் புதுவை தர்மாபுரியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 36) என்பவர் பணம் வசூல் செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் வசூல் செய்த பணத்தில் ரூ. 13 லட்சத்தை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் கையாடல் செய்து விட்டதாக தெரிகிறது.

    இது குறித்து நிதி நிறுவனத்தின் மானேஜர் முருகானந்தம் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்குமாரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த செந்தில்குமாரை பெரியக்கடை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    Next Story
    ×