என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்20 March 2017 10:55 AM GMT (Updated: 20 March 2017 10:55 AM GMT)
தேனி அருகே வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி மாலன்நகரை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது52). இவரது கணவர் கடந்த 2 மாதங்ளுக்கு முன் இறந்து விட்டார்.
இதையடுத்து கடந்த வாரம் அவர் திண்டுக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கினார். அவரது வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று கதவை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து அவரது உறவினர்கள் முருகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 4 மோதிரம், 3 ஜோடி தோடு, வெள்ளி விளக்கு, குங்கும சிமிழ், வெள்ளிகாசு, ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அல்லிநகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X