search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிர்காமத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ2½ லட்சம் நகை கொள்ளை
    X

    கதிர்காமத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ2½ லட்சம் நகை கொள்ளை

    கதிர்காமத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் காந்திவீதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது31) இவர் பத்துகண்ணுவில் உள்ள அட்டை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

    நேற்று இரவு சம்பத்குமார் வீட்டை பூட்டிவிட்டு இரவு ஷிப்டு பணிக்கு சென்றார். அவரது மனைவி பிரபாவதி அருகில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை பணி முடிந்து சம்பத்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

    பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.2½ லட்சமாகும்.

    இதுகுறித்து சம்பத்குமார் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
    Next Story
    ×