search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த 2 பேர் சிக்கினார்கள் - ரகசிய இடத்தில் விசாரணை
    X

    புதுவை பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த 2 பேர் சிக்கினார்கள் - ரகசிய இடத்தில் விசாரணை

    புதுவை பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த 2 பேர் சிக்கினார்கள். அவர்கள் இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேதராப்பட்டு:

    புதுவை பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர் பட்டமேற்படிப்பு படித்து வந்தார்.

    இவர் தன்னுடன் படிக்கும் ஆண் நண்பருடன் தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு இரவில் சென்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இருவர் ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு அந்த மாணவியை கற்பழித்தனர்.

    இதுசம்பந்தமாக ஆரோவில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 376 (டி) பிரிவு உள்பட 3 பிரிவிகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதில் 376 (டி) என்பது கூட்டாக கற்பழித்தல் ஆகும்.

    அந்த மாணவி மற்றும் அவருடன் சென்ற ஆண் நண்பர் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து முழு விவரங்களையும் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்கள் பலரை அழைத்து வந்தனர்.

    மாணவி முன்னிலையில் அவர்களை அணிவகுக்க சொன்னார்கள். அதில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருவரையும் மாணவி அடையாளம் காட்டியுள்ளார். அவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை மருத்துவ பரிசோதனை நடைபெறவில்லை. இந்த பரிசோதனைக்கு மாணவி தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது. எனவே தான் பரிசோதனை நடத்தப்படவில்லை.

    கற்பழிப்பு நடந்திருந்தால் பரிசோதனை நடத்தினால் தான் வழக்கை முறையாக கொண்டுசெல்ல முடியும். ஆனால் பரிசோதனைக்கு மாணவி எதிர்ப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

    இதுசம்பந்தமாக ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீசார் தொடங்கி ஈடுபட்டு வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அவர்கள் சோதனை நடத்தினார்கள்.

    Next Story
    ×