search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி பழகிய பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி பழகிய பெண்ணிடம் நகை பறிப்பு

    ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி பழகிய பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகரை சேர்ந்தவர் சீத்தாராமன், கார் டிரைவர். இவர் தனது மனைவி ரேவதிக்கு புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார். சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் அதே பகுதியில் வாகன போக்குவரத்து இல்லாத இடத்தில் ரேவதி மோட்டார் சைக்கிளை ஓட்ட பழகி கொண்டு இருந்தார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 3 புவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இந்த தங்க செயினின் மதிப்பு ரூ.75 ஆயிரமாகும்.

    செயினை பறிகொடுத்த ரேவதி இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×