search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதப்படுத்தப்பட்ட குடிசை வீடுகள்.
    X
    சேதப்படுத்தப்பட்ட குடிசை வீடுகள்.

    கொடைக்கானல் மலை கிராமத்தில் நள்ளிரவில் வீடுகளுக்கு தீ வைத்த கும்பல்

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் நள்ளிரவில் குடிசைகளுக்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    மன்னவனூர்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை அருகே டவர்வேலி மலைப்பகுதி உள்ளது. இங்கு உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுடி செய்யப்பட்டு வருகின்றன.

    தோட்டங்களுக்கு அருகே 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து தங்கி உள்ளனர். இவர்களை அடிக்கடி சிலர் வந்து மிரட்டி இடத்தை காலி செய்யும்படி கூறினர்.

    சம்பவத்தன்று நள்ளிரவு சில மர்ம கும்பல் விவசாயிகள் தங்கி இருந்த குடிசைகளுக்கு தீ வைத்து விட்டும், சில குடிசைகளை சேதப்படுத்தியும், மின்கம்பங்களை சாய்த்தும், மின்சார வயர்களை அறுத்து நாசப்படுத்தியும் சென்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அடிக்கடி சிலர் இப்பகுதியில் வந்து மிரட்டுவதாகவும், தற்போது குடிசைகளுக்கு தீ வைத்து சென்றுள்ளதால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிசைகளுக்கு தீ வைத்த நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×