search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணி போராட்டம்: 6 லட்சம் பேர் ஆதரவு
    X

    தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணி போராட்டம்: 6 லட்சம் பேர் ஆதரவு

    ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி தமிழகம் முழுவதும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் 5 லட்சத்து 80 ஆயிரம் ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் 36 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள்? எத்தனை பேர் ஆதரவு தருகிறார்கள்? என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஒவ்வொரு போராட்ட தளங்களிலும் லேப்டாப் மற்றும் செல்போன்கள் பதிவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 80 ஆயிரம் ஆதரவாளர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு முழு ஆதரவு தெரிவித்து மாலை வரை இருந்துள்ளனர்.

    இதுதவிர 20 சதவீதம் பேர் போராட்டத்தில் பங்கு பெற்று வெளியேறினர். அதன்படி மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

    இந்த தகவலை ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினர் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். 
    Next Story
    ×