search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 3-ந் தேதி நடைபெறுகிறது
    X

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 3-ந் தேதி நடைபெறுகிறது

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நான்காம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் வருகிற 3-ந் தேதி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நான்காம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் வருகிற 3-ந் தேதி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.

    உடையார்பாளையம் வட்டத்தில் குண்டவெளி (மே), இடையார், கோடாலிகருப்பூர் கிராமங்களிலும், அரியலூர் வட்டத்தில் அன்னிமங்கலம், ஏலாக்குறிச்சி கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் செந்துறை கிராமத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.

    பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×