search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் விவகாரத்தில் பள்ளி மாணவன் குத்தி கொலை
    X

    காதல் விவகாரத்தில் பள்ளி மாணவன் குத்தி கொலை

    காதல் விவகாரத்தில் பள்ளி மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பெங்களூரு மாநகருக்குட் பட்ட எலங்கா பகுதியில் சுரபி லேஅவுட்-ல் வசித்து வருபவர் நாராயணப்பா. பால் வியாபாரி. இவரது மகன் ஹர்‌ஷராஜ் (15). இச்சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான்.

    இந்நிலையில் அதே பள்ளியின் முன்னாள் மாணவன் ஒருவன், ஹர்‌ஷராஜின் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியை காதலித்து வந்தாராம். இந்த மாணவி, ஹர்‌ஷராஜூடனும் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த இருவரின் தீவிர நட்பு, அந்த மாணவியை காதலித்து வந்த பழைய மாணவருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஹர்‌ஷராஜ் மீது அவர் தீராத ஆத்திரம் அடைந்தார்.

    அத்துடன், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஹர்ஷாராஜை அந்த மாணவியுடன் பழகுவதை நிறுத்திக்கொள்.. எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில். அந்த பழைய மாணவரும் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். விழாவில், கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றதற்காக ஹர்‌ஷராஜை மேடைக்கு அழைத்து பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளும், வாழ்த்துகளும் அவனுக்கு குவிந்ததால், அந்த பழைய மாணவர் மேலும் ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில், விழா முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில், காந்தி நகர் சிவன் கோவில் அருகே ஹர்‌ஷராஜ் சென்றபோது, அங்கு மறைவிடத்தில் நண்பர்களுடன் காத்திருந்த பழைய மாணவர், தன் நண்பர்களுடன் சேர்ந்து. அவரை கத்தியால் குத்தினார். மார்பு பகுதியில் ரத்தம் வழிந்தோட, ஹர்‌ஷராஜ் பெருத்த குரலில் அலறினார். அவரது அலறல் சப்தம் கேட்டு, அந்த வழியாக சென்ற மாணவர்கள் சிலரும், பொதுமக்களும் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் ஹர்‌ஷராஜை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயோ அவன் பரிதாபமாக இறந்தான். மேலும் அவனை கத்தியால் குத்தியபோது, பழைய மாணவனின் நண்பர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவத்தில் ஈடுபட்ட பழைய மாணவர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.. என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காதல் விவகாரத்தில், சம்பந்தமே இல்லாமல் அப்பாவி மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×