search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி 3-ந்தேதி சென்னை வருகை
    X

    ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி 3-ந்தேதி சென்னை வருகை

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 3-ம் தேதி சென்னை வருகிறார். அன்று தாம்பரத்தில் நடைபெறும் விமானப்படை விழாவில் அவர் பங்கேற்கிறார்.
    சென்னை:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2-ந்தேதி கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அன்று மாலை 4 மணிக்கு அங்கு நடைபெறும் கருத்தரங்கில் அவர் பங்கேற்கிறார்.

    கொச்சியில் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். 3-ந்தேதி தாம்பரத்தில் நடைபெறும் விமானப்படை விழாவில் அவர் பங்கேற்கிறார்.

    125-வது படை பிரிவு ஹெலிகாப்டர் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்குகிறார்.

    இந்த விழாவில் நடைபெறும் அணி வகுப்பில் எம்.ஐ.17 மற்றும் 35 ரக ஹெலிகாப்டர் இடம்பெறும். மேலும் 125-வது படை பிரிவு ஹெலிகாப்டர்கள் வானில் சாகசத்தில் ஈடுபடும்.


    இந்த விழாவில் கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை தாம்பரம் விமானப்படைப் பயிற்சி தலைமை கமாண்டர் ஏர்மார்‌ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் தெரிவித்தார்.
    Next Story
    ×