search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் பெண்ணிடம் 3½ பவுன் பறிப்பு 4 பேர் கைது
    X

    சீர்காழியில் பெண்ணிடம் 3½ பவுன் பறிப்பு 4 பேர் கைது

    சீர்காழியில் பெண்ணிடம் 3½ பவுன் நகையை பறித்த 4 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி ரெயிலடி பகுதியை சேர்ந்தவர் தனலெட்சுமி (வயது70). இவர் வீட்டருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் ரமேஷ் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நாகை மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் தனலெட்சுமி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 4 மர்ம நபர்கள் திடீரென அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளனர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் கைகளால் செயினை இறுகப் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார்.

    இதனால் மர்மநபர்கள் வேகமாக செயினை பறித்தனர். இதில் 3½ பவுன் செயினுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ½ பவுன் டாலர் மட்டும் தனலெட்சுமியிடம் சிக்கி விட்டது.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து மர்ம நபர்கள் 4 பேரையும் விரட்டி சென்று பிடித்து சீர்காழி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×