என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணாடம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகை–பணம் கொள்ளை
Byமாலை மலர்25 Feb 2017 4:59 PM GMT (Updated: 25 Feb 2017 4:59 PM GMT)
பெண்ணாடம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே உள்ள கோனூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகன் செந்தில்ராஜா(வயது 35). இவர் சத்தியவாடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் செந்தில்ராஜாவின் தாய் தமிழ்செல்வி மட்டும் தனியாக படுத்து தூங்கினார்.
இந்தநிலையில் நேற்று காலை தமிழ்செல்வி எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி, இதுகுறித்து செந்தில்ராஜாவுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இதேபோல் அருகில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் ஜன்னல் கதவையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இருந்ததால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, செந்தில்ராஜா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கடப்பாரையால் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை–பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், பீரோவில் இருந்த வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஒரு பையை எடுத்துச்சென்ற அவர்கள் அதனை அருகில் உள்ள வாய்க்காலில் வீசிச்சென்றுள்ளனர். இதையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை–பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அருகே உள்ள கோனூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகன் செந்தில்ராஜா(வயது 35). இவர் சத்தியவாடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் செந்தில்ராஜாவின் தாய் தமிழ்செல்வி மட்டும் தனியாக படுத்து தூங்கினார்.
இந்தநிலையில் நேற்று காலை தமிழ்செல்வி எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி, இதுகுறித்து செந்தில்ராஜாவுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இதேபோல் அருகில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் ஜன்னல் கதவையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இருந்ததால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, செந்தில்ராஜா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கடப்பாரையால் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை–பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், பீரோவில் இருந்த வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஒரு பையை எடுத்துச்சென்ற அவர்கள் அதனை அருகில் உள்ள வாய்க்காலில் வீசிச்சென்றுள்ளனர். இதையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை–பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X