என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பெயரில் புதிய இயக்கம்: தீபா அதிரடி அறிவிப்பு
Byமாலை மலர்24 Feb 2017 12:48 PM GMT (Updated: 24 Feb 2017 12:48 PM GMT)
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பெயரில் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில்(இன்று) புதிய அறிவிப்பு வெளியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் தீபா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தீபாவின் ஆதரவாளர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை முடிந்து மாலை 6 மணியளவில் செய்தியாளர்களிடம் தீபா பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பெயரில் புதிய இயக்கம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக பணியை தொடர்வேன்.
ஆதரவளித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. இரட்டை இலையை மீட்போம். தற்போதையை அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. தீபக்கின் நிலைப்பாடு தெளிவற்ற நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை இயக்க கொடியை அறிமுகம் தீபா செய்தார். கருப்பு, சிவப்பு நிறங்கள் மற்றும் நடுவில் வெள்ளை நிறத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படம் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X