search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ்சில் பயணியிடம் பணம் திருட்டு: 2 பேர் பேர் கைது
    X

    பஸ்சில் பயணியிடம் பணம் திருட்டு: 2 பேர் பேர் கைது

    பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பேரை பஸ்சில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற கைலாச நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியை பார்ப்பதற்காக நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர்.இதில் சேலத்தை சேர்ந்த செந்தில் என்பவரும் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

    அதற்காக தாரமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறினார். அப்போது பஸ்சின் அருகில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் செந்திலின் பாக்கெட்டில் இருந்த ரூ.1600-ஐ எடுத்து அருகில் நின்ற மற்றொருவரிடம் கொடுத்தார்.

    இதை பார்த்த பஸ்சில் இருந்தவர்கள் 2 பேரையும் விரட்டி பிடித்து தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் சேலம் பெரிய புதூரை சேர்ந்த மாதேசன் (54), சிவராஜ் (50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1,600 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×