search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
    X

    விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

    சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்த விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    எட்டயபுரம்:

    தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா அணியை சேர்ந்த 122 எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தனர். தொகுதி மக்களுடைய கருத்துகளை கேட்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்து சசிகலா அணியை ஆதரித்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடைய வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கிருஷ்ணன்கோவில் தெருவில் உள்ள விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதே போன்று நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள பிரபாகரன் எம்.பி. வீட்டிற்கும், பாவூர்சத்திரத்தில் உள்ள தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×