என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார்
Byமாலை மலர்21 Feb 2017 9:20 AM GMT (Updated: 21 Feb 2017 9:20 AM GMT)
திருமணமான 12 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள மருங்குளம் சுந்தரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவருக்கும் தஞ்சை விளார் ரோடு அன்பு நகரை சேர்ந்த சந்தானம் மகள் கார்த்திகா (21) வுக்கும் கடந்த 6.2.17 அன்று திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கார்த்திகா தனது தந்தை வீட்டிற்கு வந்தார். கடந்த 19-ந் தேதி வீட்டில் டி.வி.பார்த்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாக 12 நாட்களில் புதுப்பெண் இறந்ததால் தஞ்சை ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X