என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்
Byமாலை மலர்21 Feb 2017 2:46 AM GMT (Updated: 21 Feb 2017 2:46 AM GMT)
வீராணம் ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன்மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்பட்டது.
வறண்டு கிடந்த இந்த ஏரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 43.50 அடியை எட்டியது. ஆனால் கீழணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
கீழணையில் இருந்து தண்ணீர் வராததாலும், பருவமழை தவறியதாலும் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 76 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆனால் வறட்சியின் காரணமாக ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. சென்னைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவும் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன்மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்பட்டது.
வறண்டு கிடந்த இந்த ஏரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 43.50 அடியை எட்டியது. ஆனால் கீழணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
கீழணையில் இருந்து தண்ணீர் வராததாலும், பருவமழை தவறியதாலும் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 76 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டது. ஆனால் வறட்சியின் காரணமாக ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. சென்னைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவும் நாளுக்கு நாள் குறைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X