என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விருத்தாசலம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஜெயலலிதா படம் உடைப்பு: மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 100 பேர் கைது
விருத்தாசலம்:
ஊழல் வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா படத்தை பொதுஇடங்களில் வைக்கக்கூடாது, பள்ளி பாடபுத்தகங்களில் இருந்து ஜெயலலிதா படத்தை நீக்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் போராட்டம் நடைபெறும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைசெல்வன் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ தலைமையில் இன்று திரண்டனர்.
திடீரென்று அவர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஜெயலலிதாவின் படத்தை உடைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பினர் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்