search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லித்தோப்பில் கணவனுடன் தகராறு: ஆசிரியை தற்கொலை முயற்சி
    X

    நெல்லித்தோப்பில் கணவனுடன் தகராறு: ஆசிரியை தற்கொலை முயற்சி

    நெல்லித்தோப்பில் கணவர் உடனான தகராறில் ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் அந்தோணி. இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டெல்சிங்மேரி (வயது33). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. டெல்சிங்மேரி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை டெல்சிங்மேரி வீட்டில் சமையல் செய்யாமல் பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது. மாலையில் வீடு திரும்பியதும் இதுகுறித்து டெல்சிங் மேரியிடம் அவரது கணவர் அந்தோணி கேட்டு திட்டியதாக தெரிகிறது. இதில் கணவன்- மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அப்போது டெல்சிங்மேரி பரீச்சை பேப்பரை திருத்த போவதாக கூறி அறை கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரமாக அறைகதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அந்தோணி ஜன்னல் வழியே பார்த்தார். அப்போது டெல்சிங்மேரி மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தர்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறை கதவை உடைத்து டெல்சிங்மேரியை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டெல்சிங்மேரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×