என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடியில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள 20 பேர், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், தாளமுத்து நகரை சேர்ந்த ஒரு ஆணும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
இந்த நிலையில், தூத் துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, முத்தையாபுரம் சந்தோஷ் நகரை சேர்ந்த சந்தோசம் மனைவி பிரேமா (வயது60) சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்ததால், அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப் பட்டது. சென்னையில் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட போது, அந்த பெண் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த பெண் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்