என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு தீபா பேரவை பாராட்டு
செஞ்சி:
செஞ்சி சட்டசபை தொகுதி ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செஞ்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செஞ்சி தொகுதி ஜெ.தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் தணிகாசலம் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் சாமிநாதன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கப்படும் என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்த முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பாராட்டு தெரிவிப்பது. வருகிற 24-ந்தேதி(வெள்ளிக்கிழமை) ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.
சசிகலாவுக்கு தண்டனை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் தீபா மற்றும் தீபக்கிற்கு கிடைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட போவதாக தீபா அறிவித்ததை வரவேற்பது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் ஜெயபால், ஆராமுதன், ஆனந்த், ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்