என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண் விஷம் குடித்து பலி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே லெணா விலக்கில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இம்முகாமில் பிரதீப்குமார் தனது மனைவி மேகலாவுடன்(வயது 27) வசித்து வந்தார்.
கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் நடந்து 5 வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப்குமார் தினமும் குடித்து விட்டு வந்து
வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மேகலா விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த மேகலாவை திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்த பின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேகலா பரிதாபமாக இறந்து விட்டார். நமணசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்