search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னையில் பேருந்துகள் சேவை நிறுத்தம்
    X

    ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னையில் பேருந்துகள் சேவை நிறுத்தம்

    ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
    சென்னை:

    மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

    தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னைவாசிகளும் இன்று போராட்டக் களத்தில் குதித்தனர்.

    சென்னை அண்ணா சாலை, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட நகரின் பல முக்கிய சாலைகளில் இன்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சாலை மறியல் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் சேவை அனைத்தும் நிறுத்தம் செய்யப்பட்டு, அருகிலிருந்த
    பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதனால் சென்னையில் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×