search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம்: ஹிப்ஹாப் ஆதிக்கு இயக்குனர் சமுத்திரக்கனி பதிலடி
    X

    போராட்டத்தில் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம்: ஹிப்ஹாப் ஆதிக்கு இயக்குனர் சமுத்திரக்கனி பதிலடி

    போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக விலகி விடுங்கள் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு இயக்குனர் சமுத்திரக்கனி பதிலளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மெரீனா போராட்டத்தை திசை திருப்ப சில சில அமைப்புகள், தீய சக்திகள் முயற்சித்து வருவதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி குற்றம்சாட்டி இருந்தார். 

    இது தொடர்பாக தமது பேஸ்புக் வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றின் மூலமாக போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றி கிடைத்து விட்டதாகவும், தேசத் தலைவர்களை ஆபாசமாக திட்டுவது சரியானதல்ல என்றும் கூறி இருந்தார்.

    இந்நிலையில், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் சமுத்திரக்கனி போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக விலகி விடுங்கள் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

    மேலும் அவர் கூறுகையில், “சினிமாக்கார்களையும், அரசியல்வாதிகளையும் மாணவர்கள் முற்றிலுமாக நிராகரித்தார்கள். வரவேண்டாம் என்று தான் சொன்னார்கள். ஹிப்ஹாப் தமிழாவையோ, லாரன்ஸ், நான் உள்ளிட்ட சிலரையோ அவர்கள் சினிமாகாரர்களாக அல்லாமல் தங்களது சகோதரர்களாக தான் ஏற்றுக் கொண்டார்கள். 

    10 லட்சம் பேர் கூடியுள்ள மெரினா கடற்கரையில் ஆதியின் பேச்சு குழப்பத்தை விளைவிக்கும். போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால் அமைதியாக அவர் விலகி இருக்கலாம். தமிழகம் முழுவதும் கண்ணியமான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

    அவர்களுக்கு நாம் உறுதுணையாக தான் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. 

    மக்கள் கூடும் இடத்தில் குழப்பவாதிகள் கூடத்தான் செய்வார்கள். யார் சூழ்ச்சி செய்தாலும் நாம் தான் அதனை முறியடிக்க வேண்டும்”  என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×