என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியரசு தின விழா ஏற்பாடுகள் தீவிரம்
Byமாலை மலர்22 Jan 2017 7:38 PM GMT (Updated: 22 Jan 2017 7:38 PM GMT)
சென்னை மெரினா காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை போலீசார் நேற்று தொடங்கிவிட்டனர்.
சென்னை:
வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் எழுச்சி போராட்டத்தை நடத்தி வருவதால், மெரினா காந்தி சிலை அருகே வழக்கமாக நடைபெறும் குடியரசு தின விழா நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், மெரினா காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை போலீசார் நேற்று தொடங்கிவிட்டனர். போலீஸ் பாதுகாப்போடு அங்கு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கவர்னர் வித்யாசாகர் ராவ் மராட்டிய மாநில கவர்னராக இருப்பதால், மும்பையில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றுவார் என்று தெரிய வந்துள்ளது. எனவே சென்னையில், காந்திசிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னருக்கு பதிலாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடியை ஏற்றி வைப்பார் என்று தெரிகிறது.
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் வருகிற 26-ந்தேதிக்குள் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் குடியரசு தின விழா ஏற்பாடுகளை செய்து வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் எழுச்சி போராட்டத்தை நடத்தி வருவதால், மெரினா காந்தி சிலை அருகே வழக்கமாக நடைபெறும் குடியரசு தின விழா நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், மெரினா காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை போலீசார் நேற்று தொடங்கிவிட்டனர். போலீஸ் பாதுகாப்போடு அங்கு பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கவர்னர் வித்யாசாகர் ராவ் மராட்டிய மாநில கவர்னராக இருப்பதால், மும்பையில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றுவார் என்று தெரிய வந்துள்ளது. எனவே சென்னையில், காந்திசிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னருக்கு பதிலாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடியை ஏற்றி வைப்பார் என்று தெரிகிறது.
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் வருகிற 26-ந்தேதிக்குள் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் குடியரசு தின விழா ஏற்பாடுகளை செய்து வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X