search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்
    X

    முத்துப்பேட்டை அருகே மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்

    முத்துப்பேட்டை அருகே மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவான்ஓடையை சேர்ந்த ரமேஷ், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் ஒரு விசைபடகில் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நேற்று மதியம் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இன்று காலை வரை கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களது செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. அவர்கள் எங்கு உள்ளனர்? என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

    இது தொடர்பாக அவர்கள் கடலோர காவல் படையில் புகார் செய்தனர். அதன் பேரில் கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் மாயமான 3 மீனவர்களையும் தேடி வருகிறார்கள்.

    மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×