search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் லாரி சக்கரத்தில் சிக்கி தபால்காரர் பலி
    X

    புதுவையில் லாரி சக்கரத்தில் சிக்கி தபால்காரர் பலி

    புதுவையில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தபால்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    புதுச்சேரி:

    புதுவை தியாகராஜா தெருவை சேர்ந்தவர் ராஜமுருகன் (வயது 40). வில்லியனூரில் உள்ள தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை செய்து வந்தார்.

    இவர், மொபட்டில் புறப்பட்டு சென்றார். புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி அந்த மொபட் மீது மோதியது.

    இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ராஜமுருகன், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×