என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே குடும்ப பிரச்சினையில் தீக்குளித்த கணவன் பலி
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கடலைக்குண்டு கே.கே.புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கம் (வயது 50). இவரது மனைவி ராணி (47). இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களது குழந்தைகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சிங்கத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
நேற்று விவசாய தேவைக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து சிங்கம் மது வாங்கி குடித்து விட்டார். இதனால் அவரது மனைவி தனது கணவரை சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி ராணி தீ வைத்தார். இதைப்பார்த்ததும் சிங்கம் அவரை காப்பாற்ற முயன்றார். கணவன்-மனைவி இருவரும் பலத்த தீக்காயங்களுடன் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடமலைக் குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்